அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி வெளிவந்த ‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை கயாடு லோஹர்.
இந்தப் படத்தின் வெற்றியின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை வென்றுள்ளார் கயாடு.
கடந்த 2021-ம் ஆண்டு முகில்பெட் கன்னடப் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கயாடு லோஹர் இதயம் முரளி மற்றும் STR 49 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தப் படத்தை மாரியப்பன் சின்னா இயக்குகிறார்.
இப்படத்தின் முதல் பார்வை நாளை மாலை 5 மணிக்கு படக்குழு வெளியிட இருக்கிறது.
மர்மமான திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படத்தை சாம் சி.எஸ் இசையமைக்கிறார். அருண்குமார் தனசேகரன் படத்தைத் தயாரிக்கிறார்.