Take a fresh look at your lifestyle.

உயிர்ப்பெறும் புதுமைபித்தன் எழுத்துக்கள்!

கலை இலக்கிய உலகின் முக்கிய எழுத்தாளரான புதுமைப்பித்தனின் சிறுகதைத் தொகுப்பிலிருந்து ‘ஆற்றங்கரை பிள்ளையார்’, ‘குப்பனின் கனவு’, ‘ஒப்பந்தம்’, ‘கட்டில் பேசுகிறது’, ‘விபரீத ஆசை’, ‘தனி ஒருவனுக்கு’ என்னும் ஆறு சிறுகதைகள் தேர்வு செய்யப்பட்டு ‘நம் அருமை புதுமைப்பித்தன்’ என்னும் தலைப்பில் நாடகமாக்கப்பட்டுள்ளது.

இந்த நாடகத்தினை தியேட்டர் ‘கோ’ தயாரித்து வழங்குகிறது.

ஒத்திகை இட உதவி: ஷ்ரவன் ராமகிருஷ்ணன், அமெரிக்கன் வேர்ல்ட் ஸ்கூல் தரமணி, வாயுஷாஷ்த்ரா (நாடக கலை மூலம் அறிவியல் கற்பிக்கும் நிறுவனம்)

இயக்கம்: பிரசன்னா ராம்குமார்
நடிகர்கள் : ஷ்ரவன் ராமகிருஷ்ணன், பாகிரதி, சுகுமார், பிரேம்குமார், நந்தகுமார், மகேந்ரா, மகேந்திரவர்மா, முருகானந்தம், சுந்தர், பௌஜிஜுவல், கௌதமி.
இசை : ஆனந்த குமார்.
ஒளி அமைப்பு : பேபி சார்லஸ்
கலை : சுகுமார், விவேக், பிரேம்குமார், மகேந்திர வர்மா
போஸ்டர் வடிவம் : குங்குமராஜ்
பாடல்கள் : வெரோனிகா

இந்த புதுமைப்பித்தன் நாடகம் பிப்ரவரி 3 ஆம் தேதியன்று மாலை 4.30 மணியளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள மேடை என்னும் அரங்கத்தில் முதன்முறையாக மேடையேற உள்ளது.

நாடகத்தை காண்பதற்கான நுழைவுச்சீட்டை “புக் மை ஷோ”வில் பெற்றுக்கொள்ளலாம்.