Take a fresh look at your lifestyle.

எல்லோர் மனங்களையும் ஊடுருவிச் செல்லும் ‘X Ray கண்கள்’!

202

இயக்குநர் எம்.ஏ.பாலா தயாரித்து, இயக்கும் ‘X Ray கண்கள்’ படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

முன்னாள் ராணுவ வீரரான எம்.ஏ. பாலா, ஏற்கனவே ‘கார்த்திகேயனும் காணாமல்போன காதலியும்’ என்ற படத்தைத் தயாரித்து, இயக்கியுள்ளார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது அடுத்தப் படமான X Ray கண்களை இயக்கி வருகிறார்.

டுவிங்கில் லேப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.ஏ.பாலா தயாரித்து, இயக்கும் இந்தப் படத்தில் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். நாயகனாக மருத்துவர் ராம் பிரசாத் நடிக்கிறார்.

மிஸ்ட்ரி திரில்லர் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகனும் நாயகியும் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவுப் பணிகளை மோகனவேலு மேற்கொள்ள, இசையமைப்பாளராக விபின் ஆர் பணியாற்றுகிறார்.

படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், இந்தப் படம் நிச்சயம் எல்லோரும் பாராட்டும் படமாக இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குநர்.

எக்ஸ்ரே கருவி எப்படி மனித உடலை ஊடுருவிச் செல்கிறதோ, அதுபோல இந்த ‘X Ray கண்கள்’ படமும் மனித மனங்களில் ஊடுருவிச் சென்று உள்ளுக்குள் எப்போதும் தங்கி இருக்கும் என்கிறார் இயக்குநர் எம்.ஏ.பாலா.

எல்லோரும் பாராட்டும்படியான படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இயக்குநர் எம்.ஏ.பாலா உள்ளிட்ட படக்குழுவுக்கு வாழ்த்துகள்.