இயக்குநர் பா.ரஞ்சித், அட்டகத்தி தினேஷுடன் ‘வேட்டுவம்’ என்ற தனது அடுத்த படத்திற்காக மீண்டும் இணைகிறார்.
இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா கடந்த 2022 இல் வெளியிடப்பட்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் ஆர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘வேட்டுவம்’ படத்தின் சமீபத்திய தகவல் என்னவென்றால் மூன்று திறமையான நடிகர்கள் இந்தப் படத்தில் இணைகிறார்கள் என்பது தான்.
இந்தப் படத்தில் தினேஷ் மற்றும் ஆர்யாவுடன், அசோக் செல்வன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினேசும் ஆர்யாவும் முறையே கதாநாயகன் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அசோக் செல்வன் திரைக்கதையில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததாகக் கூறப்படுகிறது.
சமீபத்திய தகவலின்படி பா. ரஞ்சித் தனது ‘சார்பட்டா 2’ படத்திற்கு முன்பு ‘வேட்டுவம்’ படப்பிடிப்பை முடிக்க விரும்புகிறார்.
‘வேட்டுவம்’ படத்தின் படப்பிடிப்பு 45 நாட்கள் நடைபெற உள்ளதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பா. ரஞ்சித் ஏற்கனவே ‘தங்கலான்’ படத்தை முடித்துவிட்டு தற்போது ரிலீசுக்காக காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
– தேஜேஷ்.