Take a fresh look at your lifestyle.

சினி​மா​வில் நீடிக்கும் பாலினப் பாகு​பாடு!

நடிகை கீர்த்தி சனோன் ஆதங்கம்

பிரபல இந்தி நடிகை​யான கீர்த்தி சனோன், தனுஷுடன் ‘தேரே இஷ்க் மே’ என்ற படத்​தில் நடித்​திருந்​தார். இப்​போது அவர் நடித்துள்ள ‘காக்​டெ​யில் 2’ ஜூன் 19-ல் வெளி​யாக இருக்கிறது.

இந்த நிலையில், அவர் சமீபத்தில் அளித்​துள்ள பேட்​டி​யில் திரைப்​படத் துறை​யில் தொடர்ந்து நில​வும் பாலினப் பாகு​பாடு​கள் குறித்து வெளிப்படையாகப் பேசி​யுள்​ளார்.

“சினி​மா​வில் ஒரு படத்​தின் பட்​ஜெட்டை குறைக்க வேண்​டிய சூழல் வரும்​போது, தயாரிப்பாளர்​கள் முதலில் கைவைப்​பது, கதா​நாயகி​யின் ஊதி​யத்​தில்​தான்.

படத்தின் மொத்த பட்​ஜெட்​டில் பெரும் பகுதி கதா​நாயக​னுக்கு வழங்​கப்​பட்​டாலும், ஊதியத்தைக் குறைக்​கு​மாறு நடிகை​களிடம் ​தான் பேச்​சு​வார்த்தை நடத்​துகிறார்​கள். இந்​தப் பிரச்​சினை​கள் நீண்​ட ​கால​மாக இருந்து​ வரு​கின்​றன.

திரைத் துறை​யில் ஆணா​திக்​கம் ஆழமாக வேரூன்​றி​யுள்​ளது. சமத்​து​வத்தை நோக்கி நகர்வதற்கு நாம் தொடர்ந்து மாற்றங்களை ஏற்​படுத்த வேண்​டும்.

ஒருமுறை, என்​னுடன் நடித்த ஆண் நடிகர், அவர் சீனியர் இல்லை என்​றாலும் அவரை அழைத்துச் செல்ல சிறந்த கார் வழங்​கப்​பட்​டது.

ஆனால், அவரைவிட சீனிய​ராக இருந்​தா​லும் எனக்கு அப்​படி வழங்கப்​பட​வில்​லை. இது கார் பற்​றிய விஷ​யம் இல்​லை; சமமான மரி​யாதை வேண்​டும் என்​ப​தற்​கான விஷ​யம்” என்​றார்.

சில திரைப்​படங்​களைத் தயாரித்​துள்ள அவர், “பெண்​களை மையப்​படுத்​திய கதைகளுக்​கும், பெண் கலைஞர்​களுக்​கும் அதிக வாய்ப்​பு​களை உரு​வாக்க வேண்​டும் என்​பதே எனது நோக்கம்.

பல முன்​னணி ஆண் நடிகர்​கள், பெண்​கள் முதன்மை கதா​பாத்​திரத்​தில் நடிக்​கும் படங்​களில் துணை வேடங்​களில் நடிக்கத் தயங்​கு​கிறார்​கள். இந்த மனநிலை மாற வேண்​டும்” என்று கூறியுள்​ளார்.