இந்தியத் திரைப்படத்துறையில் தனித்துவமான கலை வடிவமைப்புகளால் புகழ் பெற்ற கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் அரசின் மதிப்புமிகு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படக் கலைக்காக ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டி பிரான்ஸ் கலாசார துறை இந்த விருது வழங்கப்படவுள்ளது.
இதனிடையே சமீபத்தில் கலை இயக்குநர் தோட்டா தரணி ஆனந்த விகடனுக்கு பேட்டி அளித்திருந்தார்.
அவர் அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி.
கேள்வி:
இப்போது வந்திருக்கிற ஏ.ஐ-யை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்:
வரையறவனுக்கு பேப்பரும் ஸ்கெட்ச்சும் அடிப்படை.
அதுக்குப் பிறகு கம்ப்யூட்டரோ, ஏ.ஐ.-யோ எதை வேணும்னாலும் பயன்படுத்திக்கலாம்.
அதேபோல எந்த இடத்துல பயன்படுத்தறோம்கிறதுல நம்மகிட்ட ஒரு தெளிவு இருக்கணும்.
– நன்றி: ஆனந்த விகடன்