Take a fresh look at your lifestyle.

‘சூர்யா-44’ படத்தில் வில்லன் கேரக்டரில் இளம் நடிகர்!

சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இருவரும் இணைந்து ‘சூர்யா 44’ என்ற மிகவும் எதிர்பார்க்கப்படும் படத்தில் இணைந்துள்ளனர்.

2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வாரத்தில் அந்தமான் தீவுகளில் தொடங்கவுள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

பிரபல நடிகரும் இயக்குனருமான ‘உறியடி’ விஜய் குமார், சூர்யாவுக்கு எதிராக சக்தி வாய்ந்த வில்லனாக நடிக்க ‘சூர்யா 44’ படத்தில் என்ற பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது.

2டி என்டர்டெயின்மென்ட்டின் கீழ் விஜய் குமார் ‘உறியடி 2’ படத்தில் நடித்தார் என்பதும், தேசிய விருது பெற்ற சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்திற்கு வசனம் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

‘சூர்யா 44’ ஒரு போர் ஆக்ஷன் படமாகவும், காதல் கலந்ததாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. தயாரிப்பாளர்கள் தற்போது நடிகர்கள் மற்றும் குழுவினரை இறுதி செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இப்படத்தின் முதல் ஷெட்யூல் 40 நாட்கள் நடைபெறவுள்ளது.

– தேஜேஷ்