ராம நாராயணன் எழுதி இயக்கி, 1984-ம் ஆண்டு வெளியான ‘சட்டத்தைத் திருத்துங்கள்’ திரைப்படம், 1983-ல் வெளியான தெலுங்குத் திரைப்படமான அபிலாஷாவின் மறு ஆக்கம்.
இந்தப்படம் இ.பி.கோ. 84 என்ற எண்டமூரி வீரேந்திரநாத்தின் தூக்கு தண்டனை நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.
இப்படத்தில் மோகன் மற்றும் நளினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ராதாரவி, சத்யராஜ், சில்க் ஸ்மிதா, ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
‘சட்டத்தை உடைக்கிறேன்’ என வெளிவரவிருந்த இத்திரைப்படம், திரைப்படத் தணிக்கை வாரியத்தின் பரிந்துரையின்படி ‘சட்டத்தைத் திருத்துங்கள்’ எனப் பெயர் மாற்றம் செய்து வெளியிடப்பட்டது.
இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்காக சத்யராஜ் மற்றும் சில்க் ஸ்மிதா சம்பந்தப்பட்ட காட்சியைப் படமாக்கும்போது, சத்யராஜ் தற்செயலாக ஸ்மிதாவின் காலை மிதித்துவிட்டார்.
இதனால் ஸ்மிதா அவருடன் தொடர்ந்து நடிக்க மறுத்துவிட்டார். ஆனால், ராம நாராயணன், சத்யராஜ் ஒரு பயிற்சி பெற்ற நடனக் கலைஞர் அல்ல என்றும், இது மீண்டும் நடக்க விடமாட்டேன் என்றும் உறுதியளித்து அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்துள்ளார்.