பரண் :
”சந்திரபாபுவை முதன்முதலாக கோயம்புத்தூரில் நடந்த ஒரு விழாவில் நடிகை எல்.விஜயலட்சுமி தான் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
சந்திரபாபு தனக்கென ஒரு தனிபாணியை வைத்திருந்தார். அவருக்குத் தெரியாததே இல்லை எனலாம். பாட்டு, டான்ஸ், நடிப்பு எல்லாவற்றையும் பிரமாதமாகச் செய்வார்.
பேன்ட், கோட் போட்டுக் கொண்டு நகைச்சுவை நடிப்பை நாகரீகமாக்கியவர் அவர் தான்!
அவர் பாடிய பாடல்களை யாராலுமே மறக்க முடியாது.
அவர் மறைவதற்கு இரண்டு நாள் முன்பு நான் சேலத்தில் இருந்தேன்.
அப்போது என் மகனிடம் அவரைப்பற்றி இரவு ஒரு மணி வரையில் பேசிக் கொண்டிருந்தேன். அவர் பாடின பாடல்களைப் பாடிக் காண்பித்தேன். இது ஏதோ எதேச்சையாகத் தான் நடந்தது.
சேலத்திலிருந்து நான் சென்னைக்கு வந்ததும், ‘சந்திரபாபு மறைந்துவிட்டார்’ என்ற செய்தி என்னைத் திகைக்க வைத்தது.
என்னால் நம்பவே முடியவில்லை”
– நடிகை மனோரமா சந்திரபாபு பற்றிக் கூறியதில் இருந்து..
நன்றி: ஆனந்த விகடன் ‘காலப்பெட்டகம்’ பகுதியில்..