Take a fresh look at your lifestyle.

நடிக்க வைப்பதைவிட நடிப்பது கடினம்!

இயக்குநரும் நடிகருமான பாலாஜி சக்திவேல்

46

காதல், வழக்கு எண், கல்லூரி உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் பாலாஜி சக்திவேல், அவர் இயக்கி முடித்துள்ள ரா.ராஜ்குமார் படம் வெளிவரவில்லை.

இதற்கிடையில் அவர் தற்போது முழுநேர நடிகராகி விட்டார். சமீபத்தில் வெளியான டிஎன்ஏ, குடும்பஸ்தன், பறந்து போ படங்களில் அவர் நடிப்பு பேசப்பட்டது.

தற்போது வெளியாகி இருக்கும் ‘காந்தி கண்ணாடி’ படத்தில், தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா ஜோடியாக பாலாஜி சக்திவேல் நடித்திருக்கிறார். 

இந்த படம் குறித்துப் பேசிய பாலாஜி சக்திவேல்: நான் பல வருடங்கள் இயக்குநராக இருந்து வந்திருக்கிறேன். நடிகர்களின் மூலம் கதாபாத்திரங்கள் உயிர்ப்பெடுப்பதைப் பார்ப்பது எனக்கு எப்போதும் மகிழ்ச்சி.

ஆனால், மறுபுறம் நிற்கும் நடிகராக இருப்பது சுலபமல்ல என்பதைக் கற்றுக் கொண்டேன். அதாவது நடிக்க வைப்பதைவிட நடிப்பது கடினமானது.

நான் இணைந்த ஒவ்வொரு திட்டமும் சிறந்த இயக்குநர்களின் படைப்பாக இருந்தது. அதுபோலவே ‘காந்தி கண்ணாடி’யை ஷெரீப் விவரித்தவுடன் உடனே சம்மதித்தேன்.

மிகவும் அழகான, உணர்ச்சிமிகு திரைக்கதை அது. இறுதிப் படத்தைப் பார்த்தபோது அவர் எவ்வளவு நன்றாக உருவாக்கியிருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி.

இந்தப் படத்தில் கே.பி.ஒய் பாலா நிச்சயமாக கோலிவுட்டின் ‘கண்டெண்ட் டிரிவன் ஸ்டார்’ ஆகப் போகிறார்.

அர்ச்சனா ஒரு அபாரமான திறமைசாலி, அவருடன் திரை பகிர்ந்தது பெருமையாக இருந்தது. காந்தி கண்ணாடி பார்வையாளர்களுக்கு அற்புதமான அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.

நன்றி: தினமலர்