இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பை விளக்கும் ‘மலை’!

லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பாளர் R.கணேஷ்மூர்த்தி, சவுந்தர்யா கணேஷ்மூர்த்தி தயாரித்திருக்கும் படம் ‘மலை’.

யோகிபாபு, லக்‌ஷ்மி மேனன், காளி வெங்கட் மற்றும் அறிமுக குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்தி நடித்திருக்கும் இந்தப் படம் அக்டோபரில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் IP முருகேஷ் இயக்கியிருக்கிறார்.

மனித வாழ்வானது இயற்கையோடு இணைந்தது. மனிதர்களை போல விலங்குகளும், தாவரங்களும் மலைகளும், ஆறுகளும் நீர் நிலைகளும் இந்த பூமியில் அதிமுக்கியமானதாக இருக்கிறது.

அதீத மனித ஆசையால் இயற்கையை மெல்ல மெல்ல மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக அழித்து வந்துள்ளார்கள்.

மனிதன் முதலில் தன் சுய நலத்துக்காக சுரண்ட ஆரம்பித்தது சக மனிதனிடமிருந்துதான்.

அப்படி இரக்கமில்லாமல் சுரண்ட ஆரம்பிக்கும் மனிதன் மெல்ல மெல்ல இயற்கை வளங்களை சுரண்ட ஆரம்பிக்கிறான்.

இதிலிருந்து தப்பிக்க அதிகாரம், அரசியல், மதம், சாதி, இனம் என்று இதற்கு பின்னால் நின்றுகொண்டு சக மனிதர்கள் மீது அன்பை மறந்து எதிர்கால சந்ததியினரின் வாழ்வை குறித்து கவலைப்படாமல் மனித பேராசை இயற்கையை மொத்தமாக இன்று அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

தமிழக மலைக் கிராமம் ஒன்றில் நடக்கும் இந்தக் கதை மனிதனின் சுய நல கோரப்பசிக்கு இயற்கையின் பதில் என்ன? என்பதைப்பற்றிய ஒரு படைப்பாக வந்திருக்கிறது.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இமான் இசையமைத்திருக்கிறார்.

அக்டோபர் மாதம் வெளியாகும் திரைப்படத்தின் பாடல்கள் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.

Comments (0)
Add Comment