சினிமாவில் பெண்களின் பங்களிப்பு இன்னும் தேவை!

நடிகை மாளவிகா மோகனன் விருப்பம்

தமிழில் தங்கலான், மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை மாளவிகா மோகனன். மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வலுவான கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர், சினிமாவில் பெண்களின் பங்களிப்பு இன்னும் அதிகம் தேவைப்படுவதாகக் கூறியுள்ளார்.

சினி​மா​த் துறையில் பெண்​களுக்கு வலு​வான கதா​பாத்​திரங்​கள் வேண்​டும் என்​றால் அதிகமான பெண் இயக்​குநர்​களும் பெண் திரைக்​கதை ஆசிரியர்​களும் வர வேண்​டும் என்று மாளவிகா மோக​னன் வலியுறுத்​தி​ உள்​ளார்.

இது தொடர்பாக பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ள அவர், “திரை​யில் பெண்​களின் பிரதிநிதித்துவம் சிறப்​பாக மாற வேண்​டும் என்​றால் நடிகைகளால் மட்​டுமே ஏற்​படுத்த முடியாது.

அதி​க​மான பெண்கள், இயக்​குநர்​களாகவும், எழுத்​தாளர்​களாக​வும் வர வேண்டும்.

அவர்​களால்​ தான் தங்களுக்கே உரிய பார்​வை​யுடன் புதிய கதைகளைச் சொல்ல முடியும். தங்களு​டைய அனுபவங்களைக் கதைகளில் கொண்டு வரு​வார்​கள்.

எனக்​குக் கதை​யில் தாக்​கத்தை ஏற்படுத்​தும், வலிமை​யான பெண் கதா​பாத்​திரங்​களில் நடிக்கவே விருப்பம்.

அப்​படிப்​பட்ட கதைகள் அதி​கம் உரு​வாக வேண்​டும். அதி​க​மான பெண் இயக்குநர்​கள்​ வந்தால்​, இந்​தியாவிலும்​ குவென்​டின்​ டரான்டினோவின்​ ‘கில்​ பில்​’ போன்​ற சிறந்​த ஆக்​ஷன் திரைப்படத்தை உரு​வாக்க முடியும்” என்​று கூறியுள்ளார். 

நடிகை மாளவிகா மோகனனின் இந்தக் கருத்தை நடிகைகள் பலரும் வரவேற்றுள்ளனர்.

Comments (0)
Add Comment