விக்ரமிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்!

வீர தீர சூரன் பட இயக்குநர் அருண்குமார்

சீயான் விக்ரமின் வரவிருக்கும் படமான ‘வீர தீர சூரன்’ ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘சித்தா’ படத்தில் அறியப்பட்ட புகழ்பெற்ற இயக்குனர் எஸ்.யு. அருண்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தெடங்கி மதுரை, தென்காசி மற்றும் பிற தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் எஸ்.யு.அருண்குமார், ‘வீர தீர சூரன் 2ம் பாகம்’ படத்தின் 30 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக பகிர்ந்துள்ளார். “உணர்ச்சியுடன் கூடிய ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர்” என்று அவர் படத்தை விவரித்தார்.

சீயான் விக்ரமிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். தாகம் அதிகம் உள்ள கலைஞன் விக்ரம் என அருண்குமார் தனது பாராட்டை வெளிப்படுத்தினார்.

படத்தைப் பற்றிப் பேசிய தயாரிப்பாளர், “எனது பாணியில் படத்தை எடுக்க எனக்கு சுதந்திரம் கொடுத்ததற்காக அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர் என்னை நம்புகிறார். நான் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறேன்” என்று கூறினார்.

‘வீர தீர சூரன்’ படத்தில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, சித்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு பிரசன்னா ஜி.கே.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment