‘தினந்தோறும் (1998)’ திரைப்படம் என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்தது என குறிப்பிட்டுள்ள நடிகை ரேணுகா, அந்தப் படத்தின் மூலம் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “காதல் பகடை‘ என்ற தொலைக்காட்சி தொடரில் நான் நடித்துக் கொண்டிருந்தபோது, தினந்தோறும் திரைப்படத்தில், என்னை முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தார் இயக்குநர் நாகராஜ்.
இதில் நான் முரளி மற்றும் சுவலட்சுமி உறவின் மையமாக இருந்தேன். நாகராஜ் கதையும் வசனங்களையும் எனக்கு விரிவாக விவரித்தார், அதில் எனக்கு திரைக்கதையும் எனது கதாபாத்திரமும் மிகவும் பிடித்தது.
இந்தப் படத்தில் நான் திருநெல்வேலி பேச்சு வழக்கில் பேச வேண்டும், நாகராஜின் வழிகாட்டுதலால் அதை சிறப்பாக செய்தேன். அவரின் கதை, வசனம் மற்றும் திரைக்கதையின் நுணுக்கம் அபாரம்.
இந்தப் படம் தென்காசி மற்றும் காரைக்குடியில் படமாக்கப்பட்டது, சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தியின் மகன்கள் ராம் மற்றும் குமரன் தயாரித்தனர்.
பின்னர் குமரன் என் வாழ்க்கை துணையாக ஆனார். அவரைப் பெற்றது என் பாக்கியமாக கருதுகிறேன்.
“தினந்தோறும்” திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றியடைந்து, மக்களிடமிருந்து நல்ல மற்றும் நேர்மையான விமர்சனங்களைப் பெற்றது, இது எனக்கு நினைவில் நிற்கும் அனுபவமாக அமைந்தது.
மணிவண்ணன், கிட்டி, வடிவுக்கரசி, மலேஷியா வாசுதேவன், சத்தியப்ரியா மற்றும் தீபா வெங்கட் போன்ற திறமையான நடிகர்கள் இதில் நடித்தனர்.
நடிகை சுஹாசினி இந்தக் கதாபாத்திரத்தை தெலுங்கு மறுபதிப்பான “மனசிச்சு சூடு”யில் நடித்தார், அது வெற்றியடைந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
– நன்றி முகநூல் பதிவு.