முடிவடைந்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படப்பிடிப்பு!

சினி கிராப்ட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சாய் ராஜகோபால் இயக்கத்தில் கதையின் நாயகனாக கவுண்டமணி மற்றும் யோகி பாபு நடிப்பில் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதே முடிவடைந்தது.

கவுண்டமணி அவர்கள் அரசியலில் ஏற்படும் பிரச்சனைகளையும் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் எப்படி சாமார்த்தியமாக சமாளிக்கிறார் என்பதை இயக்குனர் சாய் ராஜகோபால் அவர்கள் குடும்பத்துடன் கண்டுகளிக்கும் வகையில் முழு நீள நகைச்சுவை திரைப்படமாக இயக்கி வருகிறார்.

கடந்த மூன்று மாதங்களாக பரபரப்பாக நடந்து வந்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படப்பிடிப்பு நல்ல முறையில் முடிவடைந்தது. பூசணிக்காய் உடைக்கப் பட்டது.

கவுண்டமணி, யோகிபாபு, சித்ரா லட்சுமணன் ‘மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா ஓ ஏ கே சுந்தர் C. ரங்கநாதன் மற்றும் பலர் மகிழ்ச்சியாக நடித்து முடித்தனர்.

இந்தப் படத்தில் மூன்று இளம் ஜோடிகளாக. ‘நடிகர் சிங்க முத்து அவர்களின் மகன் வாசன்கார்த்தி & பிந்து மயில்சாமி அவர்களின் மகன் அன்பு மயில்சாமி & சாய் தான்யா நாகேஷ் பேரன்- கஜேஷ் & அபர்ணா.

இப்படம் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment