தேசிய விருது பெற்ற திரைப் படைப்புகளை உருவாக்கிய இயக்குநர் சீனு ராமசாமி, இலக்கிய உலகிலும் தன்னுடைய தடத்தினைப் பதித்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக ‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்’ எனும் கவிதை நூலை எழுதியிருக்கிறார்.
இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கிய இந்த நூல் வெளியீட்டு விழாவில், பாரதி புத்தகாலயம் பதிப்பக உரிமையாளர் க. நாகராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கவிஞர் நந்தலாலா இந்த நூலுக்கான ஆய்வுரை அளிக்க, ‘மக்கள் செல்வன்’ நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக எழுத்தாளரும், இயக்குநருமான சீனு. ராமசாமி ஏற்புரை வழங்கினார்.
இந்நிகழ்வில் ஏராளமான வளரும் கவிஞர்களும் புத்தக வாசிப்பாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.