நடிகர் சல்மான்கானை வைத்து புதிய படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்க உள்ளார். இத்திரைப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்க உள்ளார்.
புதிய படம் குறித்து அறிவித்துள்ள ஏ.ஆர். முருகதாஸ், சல்மான் கானுடன் இணைவது உற்சாகமாக உள்ளதாகவும், மறக்கமுடியாத திரை அனுபவத்தைப் பெறத் தயாராக இருங்கள் என தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய படம் வரும் 2025 ரம்ஜானுக்கு வெளியாகும் என்றும் ஏ.ஆர்.முருகதாஸ் பதிவிட்டுள்ளார்.
– தேஜேஷ்