”குறைகளுக்கு அடியேன் ஒருவனே காரணம்”- எளிமையான ஏ.பி.நாகராஜன்!

”இந்தப் படத்தில் (அகத்தியர்) உள்ள நிறைகளுக்கெல்லாம் படத்தில் பணியாற்றிய எல்லாக் கலைஞர்களும் தான் காரணம்.

ஆனால் குறைகள் என்று இருக்குமானால் அதற்கு அடியேன் ஒருவனே காரணம் என்பதை ஏற்றுக் கொண்டு அடுத்து அந்தக் குறைகளைத் தீர்க்க முயற்சிக்கிறேன்”

_ ‘அகத்தியர்’ பட விமர்சனத்திற்கு டைரக்டர் ஏ.பி. நாகராஜன் அளித்த பதிலின் ஒரு பகுதி.
வளமான திறமை இருந்தும், தன் அகங்காரம் இல்லாத எளிமை இவரது பதிலில்!

துக்ளக் -1.2.71 இதழ்

 

Comments (0)
Add Comment