பேசும் படம்:
1962-ம் ஆண்டில் சீனாவுடன் போர் நடந்த சமயம். நம் ராணுவ வீரர்களை ஊக்கப்படுத்த இந்திய எல்லைக்குச் சென்ற தமிழ்த்திரைக் கலைஞர்கள், குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணனைச் சந்தித்தனர்.
அந்த மாளிகையில் எவ்வளவு கேஷுவலாக உட்கார்ந்திருக்கிறார்கள் நம் கலைஞர்கள். உன்னிப்பாக கவனித்தபடி சிவாஜிகணேசன், தபேலா வாசிக்கும் சந்திரபாபு. சக தோழனைப் போன்ற ஆர்மோனியப் பெட்டியுடன் இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.
இசை, அதிகார பேதமற்று எப்படியெல்லாம் சமப்படுத்துகிறது!