ஆளுமைகளுக்கு இடையில் உரையாற்றிய தருணம்!

இயக்குநர் ராசி அழகப்பன்

கமல்ஹாசன் நற்பணி மன்றம் இருந்த காலத்தில் ஈரோட்டில் நடந்த விழாவில் நான் உரையாற்றிய தருணம்.

அப்போது எழுத்தாளர் ஜி.நாகராஜன் அகில இந்திய தலைவராக இருந்தார். ஈரோடு மகாதேவன் ஈரோடு மாவட்டத் தலைவராக இருந்து மிகப்பெரிய விழாவை நடத்திக் காட்டினார்.

நான் பேசுகையில் மரியாதைக்குரிய ஆளுமைகள் கமல்ஹாசன், பாரதிராஜா, சிவசங்கரி, கோமல் சுவாமிநாதன் மேடையில் அமர்ந்திருப்பதைக் காணலாம்.

அப்போது நான் ராஜ்கமல் பிலிம்சில் உதவி இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

எதையோ தேட இந்த நிகழ்வுப்படம் கிடைத்தது. அரிய படம் அல்லவா?! 

Comments (0)
Add Comment